பிரபல பாலிவுட் நடிகையான நுஷ்ரத் பாருச்சா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் இஸ்ரேலில் கடந்த செப்டம்பர் 28முதல் அக்டோபர் 7 வரை நடைபெற்ற 39வது Haifa International Film Festival-ல் கலந்து கொள்வதற்கு சென்றுள்ளார். நேற்றைய தினத்தில் காசா பகுதியில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாகவும், 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த போர் காரணமாக திரைப்பட விழாவுக்குச் சென்ற நடிகை நுஷ்ரத் அங்கு சிக்கியுள்ள நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பாலிவுட் வட்டாரமே மிகப்பெரிய சோகத்தில் மூழ்கியது. ஆனால் இந்திய தூதரகம் தற்பொழுது அவரை தேடி கண்டுபுடித்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர். அவர் இந்தியா வந்தடைந்ததை எண்ணி அவரது ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அவரது முகத்தில் இஸ்ரேலில் பதைபதைக்க வைத்த அந்த நிமிடங்களின் சோகமும் தெரிகிறது. இதோ அந்த வீடியோ…
