தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு அழியாத இடத்தை பிடித்தவர் நடிகர் ரம்யா கிருஷ்ணன். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக தோன்றி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். இறுதியாக இவர் ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்பொழுது நடிகை ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதாவது நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்தவர் என தெலுங்கு சேதம் கட்சியின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பண்டாரு சத்யநாராயண ராவ் விமர்சித்திருந்தார். நடிகை ரோஜா நடித்ததாக கூறி ஒரு வீடியோவையும் சட்டசபையில் பண்டாரு காட்டியுள்ளார். இதற்கு பெண் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நடிகை ரோஜாவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
இந்த கருத்துக்கு நடிகை ரோஜாவுக்கு ஆதரவாக குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் நடிகை ராதிகா குரல் கொடுத்தார். தற்போது இதுகுறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணன் ரோஜா குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. ரோஜாவை பற்றி இப்படி வரும் விமர்சனத்தை ஒரு தோழியாகவும் ஒரு பெண்ணாகவும் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. பண்டாருவின் மோசமான விமர்சனம் ரோஜாவை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தையும் குறி வைத்தது போல் உள்ளது. இதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணை இப்படி கீழ்த்தரமாக பேசியவரை ஒரு போதும் மன்னிக்கவே கூடாது’ என கண்ணீருடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram