அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் சூழலால் உலகளவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் இந்த நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ளது.
இந்தியாவில் போதிய கையிருப்பு மற்றும் ஈரானுடனான நட்புறவு காரணமாக நிலைமை ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தாலும், அண்டை நாடுகளில் நிலைமை மோசமாக உள்ளது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இதனால் பாகிஸ்தானில் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, கல்வி நிறுவனங்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டில் இருந்தே பணி’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்படுவதோடு, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…
கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…