தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தையின்போது, அக்கட்சியின் சில எம்.எல்.ஏ-க்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக உளவுத்துறைக்கு மிக முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த அதிர்ச்சித் தகவல் முதலமைச்சர் விஜய்யின் செவிகளுக்கு எட்டியவுடன், தவறிழைத்த எம்.எல்.ஏ-க்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுத்தால் அது தற்போதைய ஆட்சிக்கு அரசியல்ரீதியாகப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அவர் கணக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, எம்.எல்.ஏ-க்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பின்னால் இருந்து வலைவிரித்துப் பேரம் பேசிய முக்கியப் புள்ளிகளை வேரறுக்க காவல்துறைக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த “கிளீன் ஆபரேஷன்” அதிரடி நடவடிக்கையின் விளைவாக, இதுவரை இந்தச் சதி வழக்கில் தொடர்புடைய 8 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (43). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருந்த…
தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…
கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…