“20 லட்சம் நஷ்டம்.. 5 உயிர்கள் பலி”… ஒரு குடும்பத்தையே அழித்த பணத்தாசை.. ரம்மி ஆடியதால் வந்த விபரீதம்.. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

Spread the love

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் அருகே உள்ள வெங்கட கிருஷ்ண பாளையத்தைச் சேர்ந்த சிமெண்ட் வியாபாரி மோகன், கடன் தொல்லை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தனது தாய், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு மற்றும் லாட்டரி சீட்டு வாங்கியதில் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டதால், மோகன் கடும் கடன் பிடியில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

நேற்று மதியம் சிமெண்ட் கடையிலிருந்து வீட்டிற்குச் சென்ற மோகன், அங்குத் தனது தாய் சந்திரகலா மற்றும் மனைவி ஹரிதா ஆகிய இருவரையும் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தார். பின்னர், தனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகக் பொய் கூறி, மகன் கவுசிக் (14) மற்றும் மகள் ஹரிணி (12) ஆகியோரைத் தனது பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மோகன் கடைக்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மைத்துனர் பாலகிருஷ்ணா, வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் கொலைச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் சென்ற மோகன், மாலை வரை பல்வேறு இடங்களுக்குச் சுற்றிவிட்டு, இரவு 7 மணியளவில் வேப்பங்குண்டா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்திற்குச் சென்றுள்ளார். தந்தை தற்கொலை செய்யப் போவதை அறிந்த குழந்தைகள், அவரைக் காப்பாற்றப் போராடித் தடுத்தும் பலனில்லை. அப்போது எழும்பூரில் இருந்து கச்சிகுடா நோக்கி வந்த ரயில் மோதியதில், மோகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோகன் ஏற்கனவே ரயில்வே வேலையில் இருந்து பாதியில் நின்றவர் என்பதும், ஆன்லைன் சூதாட்டத்தினால் தனது இரண்டு வீட்டு மனைகளையும், மனைவியின் நகைகளையும் இழந்து தவித்ததும் தெரியவந்தது. பணத்தை இழந்து, கடனை அடைக்க முடியாமல் ஏற்பட்ட மன அழுத்தம் ஒரு முழு குடும்பத்தையும் அழித்திருப்பது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நகரி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

35 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

44 minutes ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

56 minutes ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

1 மணத்தியாலம் ago

“ஜிம்முக்கு போ.. பாய்ஃப்ரெண்ட் இருக்கா? – TCS அலுவலகத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… பகீர் கிளப்பும் வாக்குமூலம்..!!

டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர், அங்குள்ள உயர் அதிகாரிகளால் கட்டாய மதமாற்ற முயற்சிக்கும், தனிப்பட்ட ரீதியான…

1 மணத்தியாலம் ago