CINEMA
அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு வெளிநாட்டிற்கு சென்ற ‘தளபதி 68’ படக்குழு… இப்ப இங்கதான் ஷூட்டிங்கா..? புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘லியோ’ திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலில் சக்க போடும் போட்டு வருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளே உலகம் முழுவதும் 148.5 கோடி வசூலித்து இதுவரை எந்த திரைப்படமும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து தற்பொழுது வரை 600 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தின் விஜய் நடிக்க உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படதில் விஜய் – வெங்கட் பிரபு – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைகின்றனர். இத்திரைப்படத்தில் இதுவரை டபுள் ஆக்ஷனில் யாரும் செய்திடாத பல புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளார்.
அதன்படி இத்திரைப்படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் மைக் மோகன், நடிகர் விடிவி கணேஷ், நடிகர் யோகி பாபு என பல திரைபிரபலங்கள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தளபதிக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தளபதி 68 திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு சென்று படக்குழு படப்பிடிப்பை தற்பொழுது நடத்தி வருகின்றனர்.
தென்னாபிரிக்கா, தாய்லாந்து, சென்னை என இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர். தற்பொழுது தளபதி 68 ஷூட்டிங் துருக்கியில் நடைபெற உள்ளது. இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே தனது insta பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு உறுதி செய்துள்ளார். இதோ அவரின் பதிவு…
View this post on Instagram