Categories: இந்தியா

“சதி பண்ணுறியா…?” சத்துணவு சாப்பாட்டில் புழு….! தலைமை ஆசிரியருடன் கட்டி புரண்டு சண்டை போட்ட சமையலர்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உஸ்வா பாபு மேல்நிலைப் பள்ளியில், மதிய உணவில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகார் பெரும் மோதலில் முடிந்துள்ளது. இது குறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியை ரீதா ஆர்யாவிற்கும், சமையலர் தேவிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர்.

பள்ளிக்கூட வளாகத்திலேயே இருவரும் மல்யுத்தம் செய்வது போன்ற இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைப் பதவியிலிருந்து நீக்குவதற்காகச் சமையலர் திட்டமிட்டுச் சதி செய்வதாகவும், கெட்டுப்போன பொருட்களைக் கொண்டு வேண்டுமென்றே உணவு சமைப்பதாகவும் தலைமை ஆசிரியை குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி கற்கும் இடத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம், அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் மாணவர்களின் மதிய உணவுப் பாதுகாப்பு குறித்தப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

8 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

27 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

34 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

39 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று.. கணவன் தற்கொலை முயற்சி ராஜஸ்தானில் பரபரப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தின் சிவானா பகுதியைச் சேர்ந்தவர் நிதேஷ் குமார் ஜிங்கர் (32). இவருக்கும் இவருடைய மனைவி காந்தா…

42 minutes ago

பஞ்சாங்கம் கணித்த ‘அந்த’ நாள்.. குருவின் 5, 7, 9 பார்வைகளால் தலைகீழாக மாறப்போகும் 4 ராசிகளின் வாழ்க்கை…. உங்க ராசியும் இதுல இருக்கா…?

வேத ஜோதிடத்தில் முழு முதற் சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், தற்போது தான் சஞ்சரித்து வரும் மிதுன ராசியில்…

43 minutes ago