ஜெப்ரியை தொடர்ந்து இன்று வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர்… செம ஷாக்கில் ஹவுஸ்மேட்ஸ்..!

By Soundarya on மார்கழி 29, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார்.

   

மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.  மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் சில வாரங்கல் மட்டுமே உள்ளது.

   

#image_title

 

கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளார் பிக்பாஸ். இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகிறார்கள்.

#image_title

இதில் இந்த வாரம் 7 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் நேற்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். அதாவது ஜெபிரி வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் ஹவுஸ்ட்மேட்ஸ் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று அன்ஷிதா வெளியேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.