மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணை நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட படகு விபத்து, டெல்லியைச் சேர்ந்த மாஸ்ஸி குடும்பத்தினருக்குப் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவிற்காகச் சென்ற இக்குடும்பத்தினர், வியாழக்கிழமை மாலை சுற்றுலாப் படகில் பயணித்தபோது பலத்த காற்று மற்றும் அலைகளால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோரச் சம்பவத்தில் மெரினா, அவரது நான்கு வயது மகன் திரிஷன் மற்றும் தாயார் மதுர் மாசி ஆகிய மூவர் உயிரிழந்தனர்.
விபத்தின்போது மெரினா தனது குடும்பத்தினருடன் காணொளி அழைப்பில் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென வானிலை மாறி படகு ஆடியதால் “என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அவர் அலறியது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படகில் நீர் புகுந்ததும் மெரினாவின் கணவர் பிரதீப் பயணிகளுக்கு உயிர் காப்புச் சட்டைகளை வழங்க முயன்றுள்ளார். எனினும், அவர் திரும்புவதற்குள் படகு கவிழ்ந்ததில் மூவரும் நீருக்குள் சிக்கிக்கொண்டனர். பிரதீப் மற்றும் அவரது 14 வயது மகள் உட்பட ஒரு பகுதியினர் உள்ளூர் கிராமவாசிகளின் உதவியுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மோசமான வானிலை குறித்து ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டிருந்தும் சுற்றுலாப் பயணிகளுக்கு அது தெரிவிக்கப்படவில்லை என்றும், சுற்றுலாத் தலம் என்பதால் அங்கு நிரந்தர மீட்புக் குழுக்கள் இருந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும், படகில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றப்பட்டிருந்ததாகவும், கிராமவாசிகளின் எச்சரிக்கையையும் மீறி படகோட்டி தவறான திசையில் படகைச் செலுத்தியதே விபத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் இதுவரை மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் ஆறு பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமீறல்கள் மற்றும் உயிர் காப்புச் சட்டைகள் வழங்கப்படாதது குறித்த புகார்களைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக படகுக் குழுவைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 28 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டாலும், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த கேள்விகள் இன்னும் வலுவாக எழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக…
இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை இல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. மத்தியில் பி.வி. நரசிம்ம ராவ், வி.பி.…
திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய தோழமைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்…
ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் உள்ள சட்டமாக மட்டுமன்றி, நடைமுறையில் எந்த அளவில் உள்ளது என்பதைச் சோதிக்க…
புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள…