திடீர் திருப்பம்… விஜய்க்காக களமிறங்கிய திருமாவளவன்… அடுத்த 48 மணிநேரம்… சற்றுமுன் பரபரப்பு பேட்டி….!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்க உரிமை கோரி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தவெக தலைவர் விஜய், தன்னை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி இரண்டாவது நாளாக ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். இருப்பினும், பெரும்பான்மையை (118 இடங்கள்) நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்பதில் ஆளுநர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த இழுபறி நீடிக்கும் சூழலில், தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தவெகவை ஆட்சி அமைக்க அழைப்பதே முறையான ஜனநாயகப் பண்பு என்று வலியுறுத்தினார். ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது திட்டமிட்ட சதி என்று சந்தேகிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாஜாக தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே ஆளுநரின் இந்த தாமதத்தைக் கண்டித்துள்ள நிலையில், ஆளுநர் தனது கடமையிலிருந்து தவறுவது ஏற்புடையதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தவெக தரப்பிலிருந்து விசிகவிற்கு ஆதரவு கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளதை உறுதி செய்த திருமாவளவன், அந்தக் கோரிக்கையைத் தாங்கள் புறந்தள்ளவில்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி ஏற்கனவே விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் முடிவுக்காகத் தமிழகமே காத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய அவர், “எங்களுக்கு என்று ஒரு நடைமுறை உள்ளது, நாங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. தவெகவின் கோரிக்கைக்கு மதிப்பளிக்கிறோம், ஆனால் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று விளக்கமளித்தார்.

அதிமுக மற்றும் திமுக கூட்டணி வைக்கப்போவதாகப் பரவும் தகவல்கள் வெறும் வதந்தி என்று குறிப்பிட்ட அவர், விசிகவின் உயர்மட்டக் குழு கூட்டம் விரைவில் கூடும் என்றும், அதில் எடுக்கப்படும் முடிவே கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவாக இருக்கும் என்றும் கூறினார். 2026 தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் விசிக போன்ற முக்கியக் கட்சிகளின் ஆதரவு நிலைப்பாடு ஆகியவை தான் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்பதைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Nanthini

Recent Posts

BIG BREAKING: விஜய்யின் உயிருக்கு ஆபத்து… காவல்துறை தலைமை இயக்குநருக்கு பரபரப்பு கடிதம்..!!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் செய்தியில், நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின்…

2 minutes ago

“முதுகுல குத்திட்டோமா? கிழித்து எறிந்த காங்கிரஸ்… 55 வருட பந்தத்தை முறித்து விஜய்யுடன் கைகோர்த்தது ஏன்?… ராஜேஷ்குமார் உடைக்கும் ரகசியம்”…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாக…

2 minutes ago

“தளபதிக்காக களமிறங்கிய உலகநாயகன்!… ‘மெஜாரிட்டியை சபையில்தான் காட்டணும்’… ஆளுநரை லெப்ட்-ரைட் வாங்கிய கமல்… தமிழக அரசியலில் புதிய திருப்பம்”…!!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக…

14 minutes ago

“மெஜாரிட்டி இல்லைனாலும் ஆட்சி செய்யலாம்!”… நரசிம்ம ராவ் முதல் கருணாநிதி வரை… விஜய்க்கு மட்டும் ஏன் இந்தத் தடை?… வரலாற்றை மாற்றுகிறாரா ஆளுநர்?… கசிந்த தகவல்…!!!

இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை இல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. மத்தியில் பி.வி. நரசிம்ம ராவ், வி.பி.…

23 minutes ago

BREAKING: திமுக கூட்டணி… ஸ்டாலின் கொடுத்த அதிர்ச்சி… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்…!

திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய தோழமைக்…

59 minutes ago

“நள்ளிரவில் நின்றிருந்த பெண்.. 3 மணிநேரத்தில் 40 ஆண்கள் அத்துமீறல்”… அடுத்த காத்திருந்த டுவிஸ்ட்… தெறித்து ஓடிய கும்பம்…!

ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் உள்ள சட்டமாக மட்டுமன்றி, நடைமுறையில் எந்த அளவில் உள்ளது என்பதைச் சோதிக்க…

1 மணத்தியாலம் ago