இணையதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, மருத்துவரின் கையுறையை (Glove) மிகவும் பலமாகப் பற்றியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாகக் குழந்தைகள் பிறந்தவுடன் அழும் அல்லது மெதுவாகக் கைகளை அசைக்கும். ஆனால், இந்த அதிசயக் குழந்தை பிறந்த சில நொடிகளிலேயே அங்கிருந்த மருத்துவரின் விரலைப் பிடித்ததோடு மட்டுமல்லாமல், அதை விடாமல் இழுக்கும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் குழந்தையின் அபாரமான பிடியைக் கண்டு வியந்த நெட்டிசன்கள், அந்தச் சிறுவனை “குட்டி பாகுபலி” (Nanha Bahubali) என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். அந்த மருத்துவர் தனது கையை எடுக்க முயன்றும், அக்குழந்தை தனது முழு பலத்தையும் பயன்படுத்தி கையுறையைப் பிடித்து இழுப்பதைக் காண முடிகிறது. “பிறக்கும்போதே இவ்வளவு பலமா?” எனப் பலரும் ஆச்சரியத்துடன் இந்தக் காட்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
View this post on Instagram
இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் தளங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. “நிச்சயமாக இவன் எதிர்காலத்தில் ஒரு பெரிய வீரனாக வருவான்” எனப் பலரும் அக்குழந்தையை வாழ்த்தி வருகின்றனர். மருத்துவர்களையே திகைக்க வைத்த இந்த ‘குட்டி பாகுபலி’யின் சேட்டை இப்போது இணையத்தின் ஹாட் டாபிக்
