தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது.
அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன. ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன.
இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இந்நிலையில் முன்பு பேட்டி ஒன்றில் நடிகர் ரமேஷ் கண்னா விஜயகாந்தோடு அரசியலில் இணைய ஆசைப்பட்டேன் என்று கூறியிருந்தார். அதற்கு விஜயகாந்த் ரமேஷ் கண்ணாவை அழைத்து உன்னை என் கட்சியில் சேர்ப்பது எனக்கு ஒன்றுமில்லை ஆனால் நீ என்னோடு இணைந்து கொண்டால் உன்னை யாரும் நடிக்க கூப்பிடமாட்டாங்க.
எனவே நீ தனியா நடிச்சிக்கோ. கட்சியெல்லாம் உனக்கு வேண்டாம் வேறு எதாவது உதவி வேணும்னா கேளு என்று சொன்னாராம். இதனால் ரமேஷ் கண்ணா நெகிழ்ந்து போனாராம். அப்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான உதவி இயக்குனர்களுக்கு சாப்பாடு இருக்காது. அப்போதெல்லாம் நாங்க விஜயகாந்த் வீட்டிற்கு தான் செல்வோம். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதைத்தான் எங்களுக்கும் கொடுப்பார். இதே தான் படப்பிடிப்பு தளத்திலும். யாரோடு பாகுபாடு காட்டாமல் அவர்களோடு தரையில் அமர்ந்து சாப்பிட ஒரே நடிகர் விஜயகாந்த் தான் என்று கூறியுள்ளார்.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…