Categories: சினிமா

பிரபல நடிகைக்கு மெசேஜ் அனுப்பி டேட்டிங் அழைத்த சென்னை தொழிலதிபர் – ரகசியத்தை அம்பலமாக்கிய நடிகைக்கு குவியும் வரவேற்பு!

Spread the love

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை சனா அல்தாஃப். இவர் தனது 15 வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். பல படங்களில் நடித்து தன் அழகால் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டில் சினிமாவில் இருந்து அவர் விலகினார். பிறகு 2014ம் ஆண்டில் ஹக்கீம் ஷாஜகான் என்பவரை திருமணம் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரால் சனா அல்தாஃப் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சனா அல்தாஃபுக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி வந்துள்ளார். அந்த மேசேஜ்களின் ஸ்கிரீன் ஷாட்களை சனா ஆதாஃப் தனது சமூக வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த மெசேஜ் ஸ்கிரீன்ஷாட்களில், அன்புள்ள சனா எப்படி இருக்கிறீர்கள்? நான் சென்னையைச் சேர்ந்த பாலாஜி. தொழிலதிபர். உங்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அவர் வெளிப்படையாக கேட்டுள்ளார். மேலும் எப்போதும் என்னுடன் உங்களால் வர முடியும் என்பதையும் சொல்லுங்கள். என்று அதில் கூறியிருக்கிறார்.

துபாய் அல்லது மாலத்தீவுக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் எனது இந்த ஆஃபர் பற்றி நன்றாக யோசியுங்கள் என்றும் அவர் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொழிலதிபரின் லீலைகளை அம்பலப்படுத்திய நடிகை சனா அல்தாஃப் செயலலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Elango

Recent Posts

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

1 minute ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

2 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

37 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

44 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

47 minutes ago

டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. சில மணி நேரங்களில் ஈரான் செய்த காரியம்…. நடுக்கடலில் சிக்கிய இந்தியக் கப்பல்… உலகையே உலுக்கும் போர் பதற்றம்….!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கு இன்னும் முழுமையாகக் தணியாத நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி…

57 minutes ago