உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கணவன்-மனைவி அல்லது காதலர்களுக்கிடையே ஏற்படும் தகராறுகள் கொடூர சம்பவமாக மாறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், லக்னோவில் காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காதலி மீது காரை மோதி, அவரை காரின் போனட்டில் வைத்து இழுத்துச் சென்று, பின் அவர் மீது காரை ஏற்றிச் கொடூரமாகக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அனாமிகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஷாநவாஸ் என்ற நபர் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து தன்னிடம் பழகியதையும், அவர் வேறு ஒரு பெண்ணுடன் சுற்றிக்கொண்டிருந்ததையும் அறிந்த அனாமிகா, அவரை நேரில் சந்தித்துக் காரசாரமாகக் கேள்விகள் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷாநவாஸ் அனாமிகா மீது காரை மோதியுள்ளார். இதில் அனாமிகா காரின் போனட் மீது விழுந்த நிலையிலும், காரை நிறுத்தாமல் அவரை இழுத்துச் சென்று இறுதியில் அவர் மீது காரை ஏற்றித் தப்பியோட முயன்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தலைமறைவாக இருந்த குற்றவாளி ஷாநவாஸைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…