கணவர் இறந்து 25 நாட்களே ஆன நிலையில், அந்த வீடே சோகத்தில் மூழ்கியிருந்த தருணத்தில் மைத்துனர் தனது அண்ணிக்கு எதிராக இந்த கொடூர செயலைச் செய்துள்ளார். கணவரின் மறைவுக்குப் பிறகு தனது மைத்துனர் தன் மீது தவறான பார்வையை வீசத் தொடங்கியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். படிப்படியாக அவர் அந்தப் பெண்ணை வற்புறுத்தத் தொடங்கி, ஒரு நாள் அவரைக் கற்பழித்துள்ளார்.
இந்தக் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது மாமியார் மற்றும் மாமனாSpaceரிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறியபோது, அவருக்கு நீதி கிடைப்பதற்குப் பதிலாக, அவர் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளார். மேலும், அவரை மிரட்டி வீட்டிலிருந்து வெளியேற்றியதால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்தப் பெண் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் நேரடியாகக் காவல் நிலையம் சென்று, தனக்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராகப் புகார் அளித்தார். தன்னைத் பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனர் மீது கற்பழிப்பு வழக்கையும், தனக்கு ஆதரவாக நிற்காமல் தன்னைத் தாக்கி, துன்புறுத்திய மாமியார் மற்றும் மாமனார் மீது தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் வழக்கையும் அவர் பதிவு செய்துள்ளார்.
