சாப்பாட்டில் ‘கை’ வச்சதும் ‘கதம் கதம்’.. திருமண பந்தியில் கலக்கப்பட்ட ‘அந்த ஒரு மருந்து’.. மாப்பிள்ளை வீட்டாரை அலறவிட்ட பெண் வீட்டார்.. பீகாரில் நடந்த விபரீத காமெடி சம்பவம்..!!

By Muthu Mani on ஆனி 1, 2026

Spread the love

பீகார் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், பந்தியில் பரிமாறப்பட்ட உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கணக்கான மாப்பிள்ளை வீட்டு விருந்தினர்கள், அடுத்த சில நிமிடங்களிலேயே கைகளில் தண்ணீர் பாட்டில்களுடன் அவசர அவசரமாக அருகில் உள்ள ஆற்றங்கரையை நோக்கி ஓட்டம் பிடித்த விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மணமகள் வீட்டார் தங்களது பட்ஜெட்டிற்கு ஏற்ப 100 நபர்களுக்கு மட்டுமே உணவைத் தயாரித்து வைத்திருந்த நிலையில், மணமகன் தரப்பிலிருந்து எதிர்பாராதவிதமாக 200-க்கும் மேற்பட்டோர் கூட்டமாக வந்து இறங்கியுள்ளனர். இதனால் சமையல் கூடத்தில் கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, குடும்ப கௌரவம் பாழாகிவிடுமோ என்ற பதற்றம் மணமகளின் தந்தைக்கு உருவானது.

முன்கூட்டியே சரியான எண்ணிக்கையைத் தெரிவிக்காமல், பேராசையுடன் இரட்டிப்பு எண்ணிக்கையில் ஆட்களை அழைத்து வந்த மாப்பிள்ளை வீட்டாருக்குப் பாடம் புகட்ட மணமகளின் தந்தை ஒரு விபரீதத் திட்டத்தைத் தீட்டினார். யாருக்கும் தெரியாமல் சமையல் அறைக்குள் நுழைந்த அவர், அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பிரதான உணவுப் பாத்திரங்களில் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய வீரியமிக்க பேதி மருந்தை மொத்தமாகக் கலந்துவிட்டார். சமையல்காரர்களோ அல்லது பந்தியில் இருந்த மற்றவர்களோ மணமகளின் தந்தையின் இந்த அதிரடி ரகசியச் செயலைச் சற்றும் கவனிக்கவில்லை.

   

உணவை ஆசை ஆசையாகச் சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே பேதி மருந்து வேலை செய்யத் தொடங்கி, விருந்தினர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கடுமையான வயிற்று உபாதை வெடித்தது. திருமண மண்டபத்தில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், செய்வதறியாது திகைத்த ஆண்கள் அனைவரும் தங்களது ஆடைகளைத் தூக்கிக்கொண்டு, கைகளில் தண்ணீர் பாட்டில்களுடன் அருகில் இருந்த ஆற்றங்கரையை நோக்கி நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆடம்பரத் திருமண ஆடைகளுடன் நூற்றுக்கணக்கானோர் ஆற்றங்கரைக்கு ஓடும் இந்த விநோதக் காட்சிகள் வீடியோவாகப் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் மிக வேகமாகப் பகிரப்பட்டு இணையத்தில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தி வருகிறது.