ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு காம் ஏர் நிறுவனத்தின் விமானம் வந்தது. விமான ஊழியர்கள் 13 வயது சிறுவன் விமானத்திற்கு அருகே சுற்றித்திரிந்ததை கண்டு மத்திய தொழிலாக பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த சிறுவன் ஆப்கானிஸ்தான் குண்டுஸ் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக ஆபத்தை உணராமல் சக்கரம் வைக்கும் பெட்டியில் ஏறி சிறுவன் பயணம் செய்தது தெரியவந்தது. அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அன்றைய தினமே அதே விமானத்தில் சிறுவன் மீண்டும் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து விமான போக்குவரத்து வல்லுநர்கள் கூறும்போது, இந்த சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம்.
ஏனென்றால் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது சக்கரம் வைக்கும் பெட்டியில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வரை குறையும். காற்றழுத்தம் மற்றும் வெப்ப வசதி இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குடையும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சக்கரங்கள் உள்ளக்கப்படும்போது உடல் நசுங்கி உயிரிழக்கும் அபாயமும் அதிகம். இந்த சூழலில் சிறுவன் உயிர் பிழைத்தது அதிசயம் எனக் கூறியுள்ளனர்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…