கூடுதலாக 30 தொகுதிகள் கேட்கும் பாஜக..? கிரீன் சிக்னல் காட்டுவாரா எடப்பாடி..? இன்று எடுக்கப்போகும் முக்கிய முடிவு…!

By Soundarya on மார்கழி 23, 2025

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 இடங்களில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நடைபெறவுள்ள தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க கூடுதல் தொகுதிகளைப் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த முறையை விட கூடுதலாக 10 தொகுதிகள் என மொத்தம் 30 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யுமாறு அதிமுக தலைமையிடம் பாஜக கோர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின் போது 30 தொகுதிகள் தொடர்பான கோரிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழக அரசியல் களத்தில் இந்தச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.