பகீர்… திருமணம் முடிந்த 7வது நாள்… தந்தையை காப்பாற்ற முயன்ற.. புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பீமாரத்தைச் சேர்ந்தவர் சாம்பையா (62). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இவரது இளைய மகன் சரத் என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் மிக விமரிசையாக திருமணம் நடந்து முடிந்தது. புதிய மருமகளை வீட்டிற்குள் வரவேற்ற மகிழ்ச்சியிலும், திருமணக் கொண்டாட்டங்களின் உவகையிலும் அந்த குடும்பத்தினர் அனைவரும் மூழ்கியிருந்தனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சாம்பையாவும், அவரது புதுமாப்பிள்ளை மகன் சரத்தும் தங்களது வீட்டின் மாடிக்கு ஏறிச் சென்றனர். அப்போது எதிர்பாராத வகையில் தந்தை சாம்பையா அங்கு சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்சார வயரை எதிர்பாராமல் தொட்டுவிட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

   

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன் சரத், தன் தந்தையைக் காப்பாற்ற பதறியடித்துக்கொண்டு ஓடினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரும் மின்சார வயரைத் தொட்டதால், தந்தை மற்றும் மகன் ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் புதுமாப்பிள்ளையும், தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த இந்த சோக சம்பவம் அந்தப் பகுதி முழுவதையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.