யப்பா… திருடி முடிச்சாச்சு… அடுத்து என்ன?… தூக்கம் தான்… வீட்டில் புகுந்த போதை திருடனின் லீலை… கையும் களவுமாக மாட்டிய 18 வயது வாலிபர்… ஹைதராபாத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 15, 2026

Spread the love

ஹைதராபாத்தின் பாலாபூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 18 வயது இளைஞர் ஒருவர், நள்ளிரவில் பூட்டியிருந்த வீட்டிற்குள் சட்டவிரோதமாக புகுந்து, அங்கிருந்த தங்க நகைகள் மற்றும் விலைமதிப்பற்ற மொபைல் போனைத் திருடியுள்ளார்.

திருடிய பிறகு உடனடியாக தப்பிச்செல்லாமல், அந்த இளைஞர் அதிகளவில் மது அருந்தியிருந்த போதை மயக்கத்தால் அதே வீட்டிலேயே சுகமாக உறங்கிப் போயுள்ளார். போதையின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தான் திருட வந்திருக்கிறோம் என்பதையும் மறந்து காலை வரை அந்த வீட்டிலேயே தூங்கியுள்ளார்.

   

காலையில் எழுந்த வீட்டாரும் காவல்துறையினரும், வீட்டின் உள்ளேயே திருடன் தூங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அவரை மிக எளிதாகக் கையும் களவுமாகப் பிடித்தனர். மதுபோதையில் செய்த இந்த முட்டாள்தனமான செயலால், திருடன் தப்பியோட வழியில்லாமல் போலிஸாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.