சென்னை அண்ணா நகரை சேர்ந்த நவீன் (19). தாம்பரம் அடுத்த படப்பை நோக்கி நவீன் மற்றும் இவருடைய தோழி அபிமணியும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சாலையில் மாடு ஒன்று சுற்றிக் கொண்டு இருந்துள்ளது. திடீரென்று அந்த மாடு நவீனின் பைக்கின் குறுக்கே வந்ததால் மாட்டின் மீது மோதி நிலை தடுமாறி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனிடையே எதிரதிரே வந்த கார்களும் இருவர் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திலேயே நவீன் மற்றும் தோழி அபிமணி இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவுசெய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தோழியுடன் சென்ற நவீன் உயிரிழந்தது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…
இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…
சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…
தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…