“பெத்த 4 பிள்ளைகளும் சுடுகாட்டிற்கு போயிட்டாங்க”… 5-வது மகனுக்காக கதறும் தாய்… ஒரு குடும்பத்தையே அழித்த அந்த ‘வெள்ளை’ அரக்கன்.. யாரும் எதிர்பார்க்காத கொடூரம்…!!!

Spread the love

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் லோதி பகுதியில், போதைப்பொருள் அரக்கனால் ஒரு தாய் தனது நான்கு மகன்களையும் பறிகொடுத்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்தோஷ் குமாரி என்ற அந்த முதியவர், ‘சிட்டா’ எனப்படும் கொடிய போதைப்பொருள் பழக்கத்தால் அடுத்தடுத்து தனது நான்கு வாரிசுகளை இழந்து தவிக்கிறார்.

தற்போது அவரது ஐந்தாவது மகனும் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையில் கிடக்க, உணவளிக்கக் கூட யாரும் இல்லாத நிலையில் அந்தத் தாய் கண்ணீரில் மூழ்கியுள்ளார். இது ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் சோகம் மட்டுமல்ல, பஞ்சாப்பின் பல வீடுகளில் போதைப்பொருள் ஊடுருவி இளைஞர்களின் வாழ்வைச் சீரழித்து வருவதன் கசப்பான அடையாளமாக உள்ளது.

இவ்வளவு பெரிய துயரம் ஒருபுறம் இருக்க, அப்பகுதி மக்கள் காவல்துறையின் மெத்தனப்போக்கு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சுல்தான்பூர் லோதி காவல் நிலையத்திற்கு அருகிலேயே போதைப்பொருள் விற்பனை தடையின்றி நடப்பதாகக் குற்றம் சாட்டும் மக்கள், இது தொடர்பாகப் புகார் அளித்தால் பொதுமக்களையே போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடிக்குமாறு காவல்துறை அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவோம் என்ற அரசின் வாக்குறுதிகள் வெறும் காகித அளவில் மட்டுமே இருப்பதை இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. அடுத்த தலைமுறை குழந்தைகளையாவது இந்த நச்சுச் சூழலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கதறலாக உள்ளது.

Rajeshwari

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

2 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

2 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

2 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

2 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

2 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

2 மணத்தியாலங்கள் ago