இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சில நேரங்களில் கல்வி நிலையங்களில் நிகழ்வும் நகைச்சுவையான தருணங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது தாய்லாந்து பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தாய்லாந்தில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மாணவர்களும் பொதுமக்களும் மரியாதையுடன் நிற்பது வழக்கம்.
ஆனால் அந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு மாணவன் திடீரென்று ஒரு காலை உயர்த்திய நிலையில் சிலை போல உறைந்து நின்றார். அவருடைய அசாதாரண நிலைப்பாடு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த காட்சியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாட்டுக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்திற்கு வணங்கி சிறுவன் செய்த இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
