சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பிள்ளையார்பட்டியில் அரசுப் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பேருந்தும், எதிரே வந்த பேருந்தும் பயங்கரமாக மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் நிலவுகிறது. தற்போது சம்பவ இடத்திற்கு 6 ஆம்புலன்ஸ்கள் விரைந்துள்ள நிலையில், அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
