35 ஆண்டுகளில் இல்லாத திருப்பம்… பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்…. வெளியான உத்தேச பட்டியல்…. லிஸ்ட்டை பார்த்து ஆடிப்போன அரசியல் கட்சிகள்….!

By Nanthini on பங்குனி 24, 2026

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த முறை பாஜகவுக்கு 27 தொகுதிகளும், பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 30-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளது.

கடந்த 35 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், பாட்டாளி மக்கள் கட்சி இந்த முறைதான் மிகக்குறைவான எண்ணிக்கையிலான (18) தொகுதிகளில் போட்டியிட ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், தனது பலமான வட மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பாமக தனது உத்தேச தொகுதிப் பட்டியலைத் தயார் செய்துள்ளது. அதன்படி, தர்மபுரி, பென்னாகரம், மேட்டூர், ஓமலூர், திருத்தணி, மற்றும் விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகள் இப்பட்டியலில் முக்கிய இடம்பிடித்துள்ளன. அனைத்துத் தொகுதிகளிலும் பாமக தனது சொந்த சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்திலேயே களம் காணத் திட்டமிட்டுள்ளது.

   

பாமக போட்டியிடும் உத்தேசப் பட்டியலில் பாப்பிரெட்டிப்பட்டி, குன்னம், விக்கிரவாண்டி, செய்யாறு, மற்றும் ஜெயங்கொண்டம் போன்ற வன்னியர் வாக்குகள் அதிகம் கொண்ட தொகுதிகள் முன்னிலை வகிக்கின்றன. இது தவிர, திண்டிவனம் அல்லது அரூர், மற்றும் வானூர் அல்லது காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை இறுதி செய்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 2016-இல் தனித்துப் போட்டியிட்டு 232 தொகுதிகளில் களம் கண்ட பாமக, இந்த முறை கூட்டணியின் பலத்தோடு குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளது.

   

இதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை மத்தி, மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதிமுக தலைமையிலான இந்த மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளதால், அடுத்தகட்டமாக வேட்பாளர் அறிமுகம் மற்றும் அனல் பறக்கும் பிரச்சாரங்களுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.