தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாநாட்டு நெரிசல் விபத்து தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விஜய்யிடம் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சுமார் 56 கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பாகப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
#WATCH | டெல்லி சிபிஐ அலுவலகத்தின் வெளியே..#SunNews | #KarurTVKStampede | #CBIEnquiry pic.twitter.com/gYYxmYwTJy
— Sun News (@sunnewstamil) January 12, 2026
அலுவலகத்தின் நுழைவாயில் முன்பாகத் திரண்டுள்ள ஏராளமான தவெக தொண்டர்கள், கட்சிப் பொடிகளை ஏந்தி “TVK.. TVK..” மற்றும் “அண்ணன் யாரு தளபதி.. அண்ணன் யாரு தளபதி..” என விண்ணதிர முழக்கமிட்டு வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாகத் திரண்டிருக்கும் இந்தத் தொண்டர்களின் கூட்டத்தால் சிபிஐ அலுவலகத்தைச் சுற்றிப் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
