வகுப்பறையில் உல்லாசம்..! 17 வயது மாணவனோடு காதல்… கணவரை கழட்டிவிட டீச்சர் போட்ட மாஸ்டர் பிளான்… அம்பலமான ரகசியம்…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், 37 வயதான ஆசிரியை ஒருவர் தனது 17 வயது மாணவருடன் வகுப்பறையிலேயே பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹீதர் மாஷ்பர்ன்-ஸ்மித் என்ற அந்த ஆசிரியை, தன்னிடம் பயிலும் அந்த சிறுவனுடன் முறையற்ற வகையில் பழகியுள்ளார். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இவர்களுக்கிடையேயான இந்த நெருக்கம் ‘ஸ்னாப்சாட்’ சமூக வலைத்தள செயலி மூலம் தொடங்கியுள்ளது. தொடக்கத்தில் சாதாரண குறுஞ்செய்திகளில் ஆரம்பித்த இவர்களின் பழக்கம், நாளடைவில் எல்லை மீறியுள்ளது. காவல் துறை விசாரணையில், வகுப்பறைக்குள்ளேயே மாணவருடன் பலமுறை நெருக்கமாக இருந்ததையும், அதன்பின் மேசைகள் மற்றும் தரையை ரசாயன திரவம் கொண்டு சுத்தம் செய்ததையும் ஆசிரியை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அந்த மாணவனுக்கு 18 வயது பூர்த்தியானவுடன் தனது கணவரை பிரிந்துவிட்டு அவருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டிருந்ததாகவும் ஆசிரியை தெரிவித்துள்ளார்.

   

இந்த குற்றச்செயல் தொடர்பாக காவல் துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறார்களுடன் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அந்த ஆசிரியைக்கு அதிகபட்சமாக முப்பது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.