ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகள் இந்திய அரசின் பழங்குடியினர் நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட உண்டு உறைவிட பள்ளிகளாகும். நவோதயா வித்யாலயா பள்ளிகளைப் போலவே இந்த பள்ளிகளும் பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வி, உணவு மற்றும் தங்குமிடம் ஆகிய வசதிகளை இலவசமாக வழங்குகிறது. இந்த அரசு பள்ளிகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலமாக சுமார் 7,267 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முதல்வர், பட்டதாரி ஆசிரியர், விடுதிக்காப்பாளர், இளநிலை செயலக உதவியாளர், கணக்காளர் மற்றும் உதவி அதிகாரி என பலவித பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது .
இந்தப் பணியிடங்கள் மத்திய அரசு பணிகளில் சேர விரும்பும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பணியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்புகள், B. Ed, நர்சிங் போன்ற சம்பந்தப்பட்ட துறையில் உள்ள பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் ஏற்றது போல கல்வித் தகுதி மாறுபடும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 23 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் https://nesms.tribal.gov.inஎன்ற அதிகாரப்பூர்வை இணையதள பக்கத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…