முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட இந்த முக்கிய நடவடிக்கை, மதுவற்ற தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான முதல் படியாக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இருப்பினும், இந்த 500 மீட்டர் சுற்றளவு எல்லைகளைத் துல்லியமாகக் கணக்கிடுவதிலும், சம்பந்தப்பட்ட கடைகளை அடையாளம் காண்பதிலும் கள அளவில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் குழப்பங்களும் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிகாரிகளின் மறுஆய்வு மற்றும் துல்லியமான கணக்கெடுப்புப் பணிகள் முடியும் வரை, தற்காலிகமாக இந்த டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ச. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே, அக்கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ…