சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை ஒருவர் தனது அலைபேசியில் ‘ரீல்ஸ்’ (Reels) பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
समस्तीपुर के चकसाहो के सरकारी विद्यालय में मैडम बच्चों की पीछे वाली टेबल पर लेटकर रील स्क्रॉल कर रही है।https://t.co/VNocihPkdl
— खुरपेंच Satire (@Khurpench_) April 18, 2026
மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டிய நேரத்தில், எவ்வித பொறுப்புணர்ச்சியும் இன்றி அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியப் போக்கைச் சுட்டிக்காட்டி பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இது குறித்துக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
