அட கொடுமையே… மாணவர்கள் கதறக் கதற… தலைமை ஆசிரியையை சரமாரியாக தாக்கிய ஆசிரியை… வகுப்பறையில் அரங்கேறிய பகீர் சம்பவம்… சோஷியல் மீடியாவை உலுக்கும் வீடியோ…!

By Swetha on ஆவணி 3, 2026

Spread the love

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையிலேயே தலைமை ஆசிரியையும் மற்றொரு ஆசிரியையும் பரஸ்பரம் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியை புவனா என்பவர், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கலைமதி சரியாக வேலை செய்யவில்லை என வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைமதி, மாணவர்கள் பாடம் படித்துக்கொண்டிருந்த வகுப்பறைக்குள்ளேயே சென்று தலைமை ஆசிரியை புவனாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DbkoGnVAOAH/?utm_source=ig_web_button_share_sheet

   

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆசிரியை கலைமதி தலைமை ஆசிரியை புவனாவைத் தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. வகுப்பறையில் குழந்தைகள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆசிரியைகள் இருவரும் மோதிக்கொண்ட காட்சி அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.