அந்தரங்க உறுப்பை போட்டோ எடுத்து மாணவனுக்கு அனுப்பிய ஆசிரியர்… செல்போனை எடுத்து பார்த்த தந்தை… அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on புரட்டாதி 21, 2025

Spread the love

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 17 வயது மாணவர் ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக செல்போன் பயன்படுத்தி வந்ததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் சிறுவனிடம் கேட்டனர். அப்போது அந்த சிறுவன் தன்னுடைய கணித ஆசிரியர் ஆதீஸ் என்பரிடம் பேசுவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுவனின் தந்தை சிறுவனுடைய செல்போனை சோதனை செய்துள்ளார்.

அப்போது கணித ஆசிரியர் ஆதீஸ் தன்னுடைய அந்தரங்க உறுப்பை படம் எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம்  மாணவனுக்கு அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஆதீசை விசாரித்துள்ளனர் . அப்போது ஆதீஸ் சிறுவனுக்கு அந்தரங்க உறுப்பை படம் பிடித்து இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆதீஸை கைது செய்துள்ளனர்.