வரதட்சணை கொடுமை… 3 வயது மகளை துடிதுடிக்க கொன்று தீக்குளித்துக் கொண்ட ஆசிரியை… நாட்டையே நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்..!

By Nanthini on ஆவணி 26, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் திலீப் பிஷோனி என்பவருக்கும் சஞ்சு பிஷோனி என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இந்த சம்பாதிக்கு மூன்று வயதில் ஒரு மகள் உள்ளார். இதனிடையே அரசு பள்ளி ஒன்றில் சஞ்சு ஆசிரியை ஆக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சுவுக்கும் அவருடைய கணவர் திலீப்புக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு கணவர் உட்பட மாமனார் மாமியார் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கலந்த வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து சஞ்சு வீட்டுக்கு வந்த நிலையில் கூடுதல் வரதட்சனை கேட்டு மீண்டும் மாமனார் மாமியார் தொல்லை கொடுத்துள்ளனர்.

இதனால் விரத்தி அடைந்த அவர் தன்னுடைய மகளுடன் வீட்டில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். அங்கு தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும் மகள் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இந்த சம்பவத்தில் மூன்று வயது மகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் சஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை வீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.