வகுப்பறையில் பேசியதால் “400 முறை” ஆசிரியர் கொடுத்த தண்டனை… மருத்துவமனையில் மாணவர் அனுமதி… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

By Soundarya on ஆடி 26, 2025

Spread the love

டோரா போனில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. NDA-வுக்கு தயாராகி வந்த மாணவனை அகாடமி ஆசிரியர் தண்டனையாக 400 சிட் அப்புகள் செய்ய வைத்துள்ளார். இதனால் மாணவரின் உடல்நிலை மோசமடைந்து அவர் 18 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி இருந்துள்ளது. ஷில்லாங்கைச் சேர்ந்த மஞ்சீத் குமார் பர்மன் என்பவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் தீயணைப்பு வீரராகப் பணிபுரிகிறார்.  NDA போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்காக பல்லுபூர் சௌக்கில் அமைந்துள்ள செஞ்சுரியன் பாதுகாப்பு அகாடமியில் தனது மகன் வர்க்வ் பர்மனை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை நான்காம் தேதி என்று அகாடமி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெய் என்பவர், வர்க்வ் பர்மனும், வகுப்பு தோழரும் வகுப்பில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார் இதனால் வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் இருவரையும் வெளியே அழைத்து அவர்களை திட்டி 400 சிட் அப்புகள் செய்ய வைத்துள்ளார். அதன் பிறகு இரண்டு பேரும் சிட் அப் செய்ய தொடங்கியுள்ளார்கள். மறுநாள் காலையில் வர்க்வ் பர்மனுக்கு முதுகு மற்றும் இரண்டு முழங்கால்களிலும் வீக்கம் மற்றும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்ட நிலையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவருடைய தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.