கரூர் மாவட்டம் நெய்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(35). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமிக்கு கார்த்திகேயன் கடந்த 4 மாதமாக பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பிற்கான அவசர உதவி என்னை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கனகவல்லி விசாரணை நடத்தியதில் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்தது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திகேயனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
