தமிழகத்தில் டீ மற்றும் காபியின் விலை செப்டம்பர் 1 இன்று முதல் உயர்த்தப்படுவதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுவரை 10 மற்றும் 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டீ, இன்று முதல் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. அதேசமயம் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காபியின் விலை 20 ரூபாய்க்கு உயர்கிறது. காபி தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் விலை உயர்த்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
