மிலாடி நபி பண்டிகை வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப ஏதுவாக அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
