மக்களே ரெடியா?… தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் அரசு சார்பில் மக்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். குறிப்பாக பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் நிதி உதவியும் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகை சிறப்பு தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின் போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைப்பார்கள் என தெரிகிறது. இந்த தகவல் ஏறத்தாழ தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது