“திமுக-வுடன் பின்னிப் பிணைந்த தமிழ் தேசியம்?”…. போட்டுடைத்த வன்னி அரசு…. தமிழக அரசியலில் வெடித்தது சர்ச்சை….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான வன்னி அரசு, இடைத்தேர்தலில் தமிழ் தேசியவாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தப் போவதாகக் கூறுவதை முன்வைத்து அண்மையில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். முந்தைய காலங்களில் திமுகவுடன் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்திற்காக, ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து உண்மையாகக் குரல் கொடுத்து வந்த விசிக தலைவர் திருமாவளவன் மீது திட்டமிட்டபடி பல அவதூறுகள் பரப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அரசியல் சூழல் மாறியுள்ள இன்றைய நிலையில், அதே தமிழ் தேசியவாதிகள் திமுகவுடன் மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களின் இந்த இரட்டை நிலைப் போக்கு குறித்து இப்போது யாரும் கேள்வி எழுப்புவதில்லை என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.