தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவுக்கு இந்த தேர்தல் மிகவும் சவாலானதாக இருப்பதால் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலைமை வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம் முக்கிய தலைவர்களின் விலகலும் மாற்றுக் கட்சியில் இணைவதும் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத ஈபிஎஸ் இரட்டை இலையின் வாக்கு எப்போதும் மாறாது என கூறி வருகின்றார்.
பாஜக அதிமுகவுடன் கூட்டறியில் இருந்து வரும் நிலையில் இ.பி.எஸ்க்கு எதிராக இருப்பவர்களை அமித்ஷா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதை ஈபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் அவருடன் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று அமித்ஷாவிடம் அவர் கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார். ஆனால் இவர்களின் இந்த சந்திப்பில் பேசியது குறித்து பாஜக வட்டாரங்கள் வேறு சில தகவல்களை கூறுகின்றன.
அதாவது ஓபிஎஸ், நான் தனி கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்றும் பாஜகவில் இணைய போவதாகவும் கூறி இருக்கிறார். மேலும் முக்குலத்தோர் வாக்குகள் ஓபிஎஸ்-க்கு அதிக அளவில் இருப்பதால், பாஜகவை தமிழகத்தில் நிலைபெற வைப்பது என்னுடைய பொறுப்பு என்றும் அவர் அமித்ஷாவுக்கு வாக்கு கொடுத்துள்ளார். இவருடைய இந்த நிலைப்பாட்டை அறிந்த ஈபிஎஸ் தற்போது அதிருப்தியில் இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றன. அதே சமயம் இந்த தகவலை உண்மையாகும் வகையில் இன்று ஜெயலலிதாவை நினைவிடத்தில் தனி கட்சி தொடங்கப் போவதில்லை என்று ஓபிஎஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…