புதுச்சேரி கோவிலில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்..! தேர்தல் வேண்டுதல் நிறைவேறியது.. முதலமைச்சர் விஜய்-க்கு சிலை வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய தமிழக அமைச்சர்…!!

By Swetha on வைகாசி 25, 2026

Spread the love

புதுச்சேரிக்கு அருகில் உள்ள தென்னம்பாக்கம் கிராமத்தில் புகழ்பெற்ற அழகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறினால், அதற்கு நேர்த்திக்கடனாக சிலைகளைச் செய்து வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக, குழந்தை வரம் வேண்டிப் பெற்றவர்கள் தங்களது குழந்தைகளின் சிலைகளைச் செய்து இங்கு நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ்குமார், தற்போது வீட்டு வசதி, நகர்ப்புற திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டி, இந்த அழகர் கோவிலில் சிலை வைப்பதாக அமைச்சர் ராஜ்குமார் முன்பு நேர்த்திக்கடன் நேர்ந்துள்ளார்.

   

தேர்தலில் தவெக வெற்றி பெற்று, விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார் தென்னம்பாக்கம் கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது, தனது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் விஜய் மற்றும் தனது சொந்த உருவத்திலான சிலைகளை நேர்த்திக்கடனாகக் கோவிலில் வைத்து, அழகு சித்தரை வணங்கி வழிபாடு செய்துள்ளார்.