தமிழகத்தில் நகர நிலவரி திட்ட பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சர்க்கார் புறம்போக்கு, அரசு மனை, ராயத்து வரிமனை என மாற்றம் செய்து நில உடமை தாரருக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39, 428 உட்பிரிவுகளில் வகைப்பாடு மாற்றப் பணிகளை மேற்கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருவாய் வட்டாட்சியர், நத்தம் நிலவரி வட்டாட்சியருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
