தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் 1,03,123 பணியாளர்களுக்குப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘சாதனை ஊக்கத் தொகை’ வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பணியாளர்களின் பணி நிலைக்கு ஏற்ப ₹85 முதல் ₹625 வரை இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகையாக ₹3,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சாதனை ஊக்கத் தொகை 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை மற்றும் அடுத்தடுத்த பொங்கல் தினங்களை முன்னிட்டு இந்தத் தொகை பணியாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
