தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடந்து வரும் இடையில் இன்னும் சில மாதங்களில் பதவிக்கால முடிவடைய உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத சில திட்டங்களை திமுக அரசு தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் தற்போது மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதம் தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. 2026 பேரவை தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என மூன்று பயனாளர்கள் உள்ளதால் குடும்பத்திற்கு 3000 ரூபாய் வழங்கும் அரசு என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
