தமிழகத்தில் பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளி விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வளாகத்தில் இருக்கும் கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள செடி கொடிகளை அகற்றவும், திறந்தவெளி கிணறு, கழிவு நீர் தொட்டி மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றை கண்காணிக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது..
