கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், ஏசி பயன்படுத்தினாலும் மின் கட்டணத்தைக் குறைக்கத் தமிழக மின்சார வாரியம் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அறையின் பரப்பளவிற்கு ஏற்றவாறு சரியான ‘டன்’ அளவில் ஏசியைத் தேர்வு செய்வது அவசியம்; உதாரணமாக, 100 சதுர அடி அறைக்கு 0.8 டன், 150 சதுர அடி வரை 1.0 டன் மற்றும் 250 சதுர அடிக்கு மேல் 2.0 டன் ஏசி பயன்படுத்துவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும். முறையான அளவிலான ஏசியைப் பொருத்துவதன் மூலம் தேவையற்ற மின் செலவைத் தவிர்த்து, அறைக்குத் தேவையான குளிர்ச்சியையும் துல்லியமாகப் பெற முடியும்.
மேலும், ஏசியின் வெப்பநிலையை (Temperature) 24 முதல் 26 டிகிரி செல்சியஸில் வைப்பதே உடல்நலனுக்கும், மின் சேமிப்பிற்கும் உகந்தது என மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ஏசியில் ஒவ்வொரு ஒரு டிகிரி வெப்பநிலையைக் குறைக்கும்போதும் மின்சாரப் பயன்பாடு 6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்பதால், 18 டிகிரியில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. இந்த எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடை காலத்தில் ஏசியை நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் மின் கட்டணம் தாறுமாறாக உயர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…
குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…
சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…
நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…
தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…