ஹைதராபாத்தில் தனது மாமியாரை ஹெல்மெட்டால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடிய 28 வயது மருமகன் சிநேகித் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி, 39 வயதான அருணா என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சிநேகித் அவரை ஹெல்மெட்டால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருணா, சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அருணாவின் மகள் காவ்யா அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிநேகித் தனது மாமியாரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனது குற்றத்தை மறைக்க வலிப்பு நாடகமாடிய சிநேகித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…