பதறவைக்கும் காட்சி..! ஓடும் பைக்கில் மாமியாரை ஹல்மெட்டால் தாக்கி… கீழே தள்ளிவிட்டு கொன்ற மருமகன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

ஹைதராபாத்தில் தனது மாமியாரை ஹெல்மெட்டால் தாக்கி கொலை செய்துவிட்டு, அவர் வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடிய 28 வயது மருமகன் சிநேகித் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி, 39 வயதான அருணா என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சிநேகித் அவரை ஹெல்மெட்டால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அருணா, சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.

 

   
View this post on Instagram

 

A post shared by Mohammed yasar ullah shakeel (@mohammedyasarullahshakeel)

மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அருணாவின் மகள் காவ்யா அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சிநேகித் தனது மாமியாரைத் தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தனது குற்றத்தை மறைக்க வலிப்பு நாடகமாடிய சிநேகித்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.