தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதோடு சில நிதி உதவிகளும் வழங்கப்படுகிறது. அதேசமயம் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்களை வீடு தேடி வழங்கும் தாயுமானவர் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் குறித்து அரசு தற்போது முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதன்படி திட்டத்தின் பயனாளிகளுக்கு கருவிழி மற்றும் கைரேகையை பதிவு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டால் பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு பொருட்களை வழங்க உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.. இது கைரேகை மற்றும் கருவிழி பிரச்சனையால் சிரமப்பட்ட பயனர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
