புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கட்சிகள் அனைத்தும் வியக்கும் அளவுக்கு சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கிய ஜோஸ் சார்லஸின் வாக்குறுதி கவனம் எடுத்துள்ளது. ஜோஸ் சார்லஸின் LJK கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியாகி உள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு 35 ஆயிரம் நிதி உதவியும் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 20000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை போல புதுச்சேரியில் இந்த திட்டம் மக்கள் மத்தியில் கவனம் எடுத்துள்ள நிலையில் இந்த புதிய தேர்தல் வாக்குறுதி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
